"உலகமெல்லாம் போற்ற ஒளி வடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து"
- திருஅருட்பா ஆறாம் திருமுறை 1685
வள்ளர்பெருமானார் வரலாற்றுக் குறிப்புகள்
இயற்பெயர் : இராமலிங்கம்
சிறப்புப்பெயர் : திரு அருட்பிரகாச வள்ளலார்
அவதாரம் : 5.10.1823, சுபானு புரட்டாசி 21 சித்திரை நட்சத்திரம், ஞாயிறு
அவதரித்த ஊர் : மருதூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
பெற்றோர் : இராமையா - சின்னம்மையார்
உடன் பிறந்தோர் : சபாபதி, சுந்தராம்பாள், பரசுராமர், உண்ணாமலையம்மாள்
வாழ்ந்த இடங்கள் : சென்னை 1824 - 1858
கருங்குழி (கடலூர் மாவட்டம் ) 1858 - 1867
வடலூர் 1867 - 1870
மேட்டுக்குப்பம் 1870
பதிப்பித்த நூல்கள் : ஒழிவில் ஒழுக்கம் 1851
தொண்டமண்டல சதகம் 1855
சின்மய தீபிகை 1857
இயற்றிய நூல்கள் : மனுமுறை கண்ட வாசகம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்
அருளிய பாடல்கள் : திரு அருட்பா (ஆறு திருமுறைகள்)
நிறுவிய நிலையங்கள் : சன்மார்க்க சங்கம் 1865
சத்திய தருமச்சாலை 1867
சத்திய ஞான சபை 1872
சித்தி வளாகம் 1870
அருட்பெருஞ்சோதி
ஆண்டவரானது : 30.01.1874, ஸ்ரீமுக, தை 19, வெள்ளிகிழமை இரவு 12 மணி
சன்மார்க்க நெறிகள்
- கடவுல் ஒருவரே - அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
- சிறுதெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும். தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யாதிருத்தல் வேண்டும்
- பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்
- உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்
- மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்
- சாதி, இனம், சமயம், மதம், மொழி, தேசம் முதலிய வேறுபாடின்றி இருத்தல் வேண்டும்
- எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்
- உயிர் இரக்கமே உண்மையான பிரார்த்தனை ஆகும்
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
- சாகாதவரே சன்மார்க்கி
நன்றி: திரு அருட்பிரகாச வள்ளலார் 188 - வது ஆண்டு அவதார தின விழா அழைப்பிதழ்.
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!